மீண்டும் திறக்கப்படும் பத்மநாபபுரம் அரண்மனை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

 

மீண்டும் திறக்கப்படும்  பத்மநாபபுரம் அரண்மனை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3ஆம் தேதி திறக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் திறக்கப்படும்  பத்மநாபபுரம் அரண்மனை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கோவில்கள் ,பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் கேரள அரசு கட்டுப்பாட்டிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் திறக்கப்படும்  பத்மநாபபுரம் அரண்மனை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூன்று மூடப்பட்ட நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையும் மூடப்பட்டது. தற்போது பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.