நிதிநிலை அறிக்கையில் திமுகவின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது- ப.சிதம்பரம்

 

நிதிநிலை அறிக்கையில் திமுகவின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது- ப.சிதம்பரம்

2021 -2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தாக்கல் செய்தார். தமிழகத்தில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021 -2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட திமுக வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை

நிதிநிலை அறிக்கையில் திமுகவின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது- ப.சிதம்பரம்

தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்தேன். 6 மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி.

நிதி நிலை அறிக்கையில் தி மு கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது. தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன். பெட்ரோல் மீதான வரியில் ரூ 3 ஐக் குறைத்திருப்பது ஓர் உதாரணம். பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதையும் வரவேற்கிறேன். பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார். இன்னும் 6 மாதத்தில் தரவிருக்கும் 2022-23 ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.