மனைவியின் இறுதிசடங்கிற்கு வந்த உறவினருக்கு கொரோனா : தனிமைப்படுத்தி கொண்ட அதிமுக அமைச்சர்!

 

மனைவியின் இறுதிசடங்கிற்கு  வந்த உறவினருக்கு கொரோனா : தனிமைப்படுத்தி கொண்ட அதிமுக அமைச்சர்!

அமைச்சர் ஓ. எஸ். மணியன் தன்னை ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்துள்ளார்.

மனைவியின் இறுதிசடங்கிற்கு  வந்த உறவினருக்கு கொரோனா : தனிமைப்படுத்தி கொண்ட அதிமுக அமைச்சர்!

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, முக ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தில் அமைச்சர் ஓ. எஸ். மணியன் மனைவியின் இறுதி சடங்கு நடைபெற்றது.

மனைவியின் இறுதிசடங்கிற்கு  வந்த உறவினருக்கு கொரோனா : தனிமைப்படுத்தி கொண்ட அதிமுக அமைச்சர்!

இந்நிலையில் கலைச்செல்வி இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அமைச்சர் ஓ. எஸ். மணியன் ஒருவாரம் தன்னை தனிமைப்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த துக்க நிகழ்வில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.