“உறுப்பு தானம் செய்திட முன்வாருங்கள்” : முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!
Aug 12, 2020, 11:17 IST1597211229000
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
உடல்உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் உடல்உறுப்பு தானம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, “உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும்” என்று சர்வதேச உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ” மூளைத்தண்டு சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேரும் பேருக்கு வாழ்வளிக்க முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.