பணியிழந்த ஊழியர்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்க உத்தரவு!

 

பணியிழந்த ஊழியர்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்க உத்தரவு!

புதுச்சேரியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலையிழந்து 61 பேருக்கு போனஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி வேலை இழந்த 61 பேருக்கு பணிக்கால பணப்பலன்களை வழங்கக்கோரி பணியாளர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பணியிழந்த ஊழியர்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்க உத்தரவு!

அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தீபாவளியை கணக்கில் கொண்டு அவரவர் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.