18 பேருக்கு கொரோனா தொற்று! நோக்கியா நிறுவனம் மூடல்

 

18 பேருக்கு கொரோனா தொற்று! நோக்கியா நிறுவனம் மூடல்

சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 நபர்கள் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் மற்ற 3 நபர்கள் கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளர்கள் தொடர்பில் இருந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

18 பேருக்கு கொரோனா தொற்று! நோக்கியா நிறுவனம் மூடல்

இன்று புதிதாக ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கும் நோக்கியா சைமன்ஸ் மற்றும் ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரிந்த 8 பேருக்கும், குன்றத்தூர், படப்பை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய மூன்று பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரகடம் பகுதியில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 18 நபர்களுக்கு இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாது. இதையடுத்து நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது.