கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்!
Mar 3, 2021, 19:03 IST1614778405000
தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கடந்த பல நாட்களாக கொரோனா பரவல் குறைந்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் உயர்ந்துள்ளது.இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு, அமைச்சர் காமராஜ் ஆகியோரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.