போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.

 

போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.

தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இப்போதெல்லாம் சென்னையை விட்டு, திடீர், திடீரென மாயமாகி விடுகிறார்.அவரைப் பின் தொடர்ந்து கண் காணித்தால் தேனிக்கும், சென்னைக்கும் இடையே பறந்தபடி இருக்கிறார். எதற்காக அடிக்கடி தேனி சென்று வருகிறார் என்று விசாரித்தால், காரணம் தங்கத் தமிழ் செல்வன் என்பது தெரிய வந்தது.
தேனி வடக்கு மாவட்டப் தி.மு.க பொறுப்பாளராக நியமிக்கப்படிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் போடி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும்படி அவருக்கு திமுக மேலிடம் உத்தரவு போட்டிருக்கிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் தொகுதிப் பணிகளில் மிக சீரியசாக களம் இறங்கியிருக்கிறார்.இதுமட்டுமல்ல, வரும் சட்டமன்றத் தேர்தலில் போடியில் தங்க தமிழ் செல்வன் நிற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.


இதனாலேயே தனக்கு ஆயிரம் பணிகள் தலைக்கு மேல் இருந்தாலும் அவ்வப்போது தேனி மாவட்டத்ததையும் ‘விசிட்’ அடித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம். கடந்த2019 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்த போதும் தேனி தொகுதியில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைத்து, மகனை எம்.பி-யாக்கியவர் பன்னீர் செல்வம். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும், தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.


சமீபத்தில் போடி சென்ற ஓ.பி.எஸ். அங்குள்ள கோயில் பணிகள், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்கள் தவிர பல்வேறு திட்டப்பணிகளையும் செய்து தொடங்கி வைத்தார் இதில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான மேலப்பரவுக்கு நடந்தே சென்று பொது மக்களை அசத்தினார்.தேனி மாவட்டத்துக்குள் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்தத் தேர்தலில் அந்த நான்கையும் வென்றே தீருவது என்பதில் பன்னீர் உறுதியாக இருக்கிறாராம். இதில் போடியில் ஓ.பி.எஸ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.