மணல் திருட்டை வீடியோ எடுத்த நிருபரை அடித்த ஓ.பி.எஸ் தரப்பு! – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

 

மணல் திருட்டை வீடியோ எடுத்த நிருபரை அடித்த ஓ.பி.எஸ் தரப்பு! – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தேனியில் மணல் திருட்டை வீடியோ எடுத்த பத்திரிகை நிருபர் மீது ஓ.பி.எஸ் தம்பியின் ஆட்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவருமான பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டி பகுதியில் உள்ள பாப்பியப்பட்டி கண்மாயில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தம்பி ஓ.ராஜா தரப்பினர் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதை படம் பிடித்து செய்தி சேகரித்த செய்தியாளர் சாதிக்பாட்சா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

http://


தமிழகத்தின் கனிம வளங்களை ஆட்சியாளர்களின் ஆதரவோடு திருடுவது தொடர்கதையாகி வருவதும், அதனைத் தடுப்போர், செய்தி சேகரிப்போர், புகார் அளிப்போர் அரசியல் குண்டர்களால் தாக்கப்பட்டு வருவதையும் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.