‘முன்னாள் அமைச்சரை’ அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

 

‘முன்னாள் அமைச்சரை’ அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘முன்னாள் அமைச்சரை’ அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

அந்த அறிக்கையில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும்

வடசென்னை தெற்கு மாவட்டததை சேர்ந்த நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ். சுந்தரராஜ்(முன்னாள் அமைச்சர்) , விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த வாசன், ராமராஜ் பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ் உள்ளிட்டோர், கட்சியின் மீதான திருப்தியால் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.