எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!

 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!

அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்களும் அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.