அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திருப்பதியில் சாமி தரிசனம்!

 

அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திருப்பதியில் சாமி தரிசனம்!

துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்களுடன் சென்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

2021 சட்டமன்றத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரம் அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்னைக்கு சுமுகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கார சார விவாதம், அமைச்சர்கள் சந்திப்பு, அரசு நிகழ்ச்சிகளை தவிர்ப்பது என அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி ஈபிஎஸ் தான் தேர்தலில் போட்டியிடுகிறார் என ஓபிஎஸ் அறிவித்ததால், இந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திருப்பதியில் சாமி தரிசனம்!

இந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஸ், புரட்டாசியில் 4ம் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திருப்பதியில் சாமி தரிசனம்!

பின்னர், ரங்கநாயகி மண்டபத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கோவிலின் முன் தேங்காய் உடைத்து வழிபட்ட ஓபிஎஸ், பெரிய ஜீயர் மடத்திற்கு ஜீயரிடம் ஆசி பெற்றார்.