தொடர் விடுமுறை – ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
Oct 25, 2020, 14:41 IST1603617084000
ஊட்டி
ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. இதனையொட்டி, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மலர்கள் பூத்து குலுங்கி வருகின்றன. மேலும், சுற்றுலா பயணிகளை கவரும்
விதமாக அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் 5,000 பூந்தொட்டிகளில் பால்சம், ஜெரொனியம், பிக்கோனியா, ரெட் சால்வியா உள்ளிட்ட மலர்கள் மலர் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று ஊட்டிக்கு வர துவங்கியுள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது.