செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் மட்டுமே திறப்பு

 

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் மட்டுமே திறப்பு

நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும் கனமழையும் பெய்தது. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் மட்டுமே திறப்பு

இந்நிலையில் நேற்று இரவு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 9000 கன அடி நீர் திறப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் இன்று காலையிலிருந்து குறைக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு 7 மணி நிலவரப்படி, 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22.10 அடியை எட்டியுள்ளது. நீரின் மொத்த கொள்ளளவு 3146 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில் நீர் இருப்பு 3645 கன அடியாகவும், நீர்வரத்து 2446கன அடியாகவும் உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து ஏரிகளில் இருந்து உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.