“2 டன் வெங்காயம் பதுக்கல்” – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

 

“2 டன் வெங்காயம் பதுக்கல்” – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பெரம்பலூர் அருகே 2 டன் வெங்காயங்களை பதுக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள இரூர் பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், அதிரடி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரூர் உள்ளிட்ட 4 இடங்களில் 2000 கிலோ வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

“2 டன் வெங்காயம் பதுக்கல்” – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், அந்த வெங்காயங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், 2000 கிலோ வெங்காயத்தை பதுக்கிய முத்துச்செல்வன், ரவிச்சந்திரன், அழகேசன், நடராசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரூர் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.