நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரி அருகே மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை!

 

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரி அருகே மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை!

கொரோனா அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளுக்கு இடையே நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க மறுத்த மத்திய அரசு, ஒத்திவைக்கவும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பல மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வார்கள் என வெகுவாக கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ படிப்புக்கான இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்கள் எடுக்கும் ஒரே முடிவு தற்கொலை தான். பயமின்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியலாளர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தோல்வி அடைந்து விட்டால் எதிர்காலம் என்ன ஆகும் என எண்ணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரி அருகே மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை!

நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா (20). தந்தை மணிவண்ணன், தாய் சித்ராவுடன் இலக்கியம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். நாளை தேர்வு எழுதவிருந்த இந்த மாணவன் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக நீட் தேர்வுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர் விக்னேஷும், இன்று மாணவி ஜோதிஸ்ரீ துர்காவும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது.