“வீட்டுக்கு போகும்போதெல்லாம் பாட்டு பாடுவார்கள்” -ஈவ் டீசிங்கில் சிக்கி சின்னாபின்னமான பெண்

 

“வீட்டுக்கு போகும்போதெல்லாம் பாட்டு பாடுவார்கள்” -ஈவ் டீசிங்கில் சிக்கி சின்னாபின்னமான பெண்

ஒரு வாலிபர் கூட்டம் ஒரு டீனேஜ் பெண்ணை ஈவ் டீசிங் செய்து, அவரை தீவைத்து கொன்ற சம்பவம் அனைவரின் இதயத்தையும் கனக்க செய்துள்ளது .


பீகாரில் வைஷாலி பகுதியில் ரசூல்பூர் ஹபீப் கிராமத்தில் குல்னாஸ் கட்டூன் என்ற டீனேஜ் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அவர் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் அந்த
பகுதியை சேர்ந்த சந்தன் ராய் மற்றும் சதீஷ் ராய் ஆகிய இரு வாலிபர்கள் அந்த பகுதியில் உள்ள மேலும் சில நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை பாட்டு பாடி கிண்டல் செய்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார் .அவர்கள் அந்த வாலிபர்களை கண்டித்துள்ளார்கள் .மேலும் போலீசிலும் புகார் கூறியுள்ளார்கள் .
இதனால் கடுமையான கோபமுற்ற அந்த வாலிபர் கூட்டம் அந்த பெண்ணை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தது .அதனால் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே குப்பைகளை கொட்ட அந்த பெண் சென்றபோது அந்த வாலிபர் கூட்டம் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது .அதன் பின்னர் அந்த கூட்டம் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டது .
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் நவம்பர் 16 மாலை இறந்தார்.அப்பெண் தனது மரண வாக்கு மூலத்தில் , சதீஷ் மற்றும் அவரது தந்தை வினய் மற்றும் உறவினர் சந்தன் ஆகியோரை குற்றம் சாட்டினார்
இந்த பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வீடியோ அறிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதில் சதீஷ் தன்னை தீவைத்து கொளுத்தியதாக குற்றம் சாட்டினார்.இது பற்றி கூறிய போலீசார் “குற்றம் சாட்டப்பட்ட சந்தன் ராயை நாங்கள் கைது செய்துள்ளோம், வினய் ராய் மற்றும் அவரது மகன் சதீஷ் ராய் ஆகியோரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்” என்று கூறினார்கள் .

“வீட்டுக்கு போகும்போதெல்லாம் பாட்டு பாடுவார்கள்” -ஈவ் டீசிங்கில் சிக்கி சின்னாபின்னமான பெண்