குடிபோதையில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!

 

குடிபோதையில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!

தூத்துக்குடி:
குடிபோதையில் தகராறு செய்தவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் நமசிவாயராஜ் (வயது55). இவர், பாளை ரோட்டிலுள்ள ராஜாஜி பூங்கா அருகே, குடிபோதையில், மணிநகரை சேர்ந்த சந்திரபோஸ் (வயது44) என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!

இதையடுத்து தகராறு முற்றிய நிலையில், அருகில் கிடந்த கல்லை எடுத்து, சந்திரபோஸ் தாக்கியதில் நமசிவாயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த, தென்பாகம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, தாளமுத்து நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சந்திரபோஸை கைது செய்தனர்.