சுற்றுலா வேன் மீது ஆம்னி வேன் மோதி விபத்து – பெண் உள்பட மூவர் பலி

 

சுற்றுலா வேன் மீது ஆம்னி வேன் மோதி விபத்து – பெண் உள்பட மூவர் பலி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் அகமது ஹாசன்(30). இவர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக, இன்று குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார். சத்திரக்குடி அருகே சென்றபோது ஆம்னி வேன் மீது, எதிர்பாராத விதமாக கர்நாடகாவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

சுற்றுலா வேன் மீது ஆம்னி வேன் மோதி விபத்து – பெண் உள்பட மூவர் பலி

இதில், ஆம்னி வேன் உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் அகமது ஹாசன், செய்யது அகமது, ரூபானா ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் நடந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.