அரசு பேருந்து – ஆம்னி வேன் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

 

அரசு பேருந்து – ஆம்னி வேன் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

அரசுப் பேருந்தின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது.

அரசு பேருந்து – ஆம்னி வேன் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானியை ல் சேர்ந்த 8 பேர் பெங்களூரில் உள்ள ஒண்டர்லா சுற்றுலா தளத்திற்கு ஆம்னி வேன் மூலம் சென்று உள்ளனர். அப்போது காவேரிப்பட்டினம் அருகே ஆம்னி வேன் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து அங்கு பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆம்னி வேன் வேகமாக வந்து மோதியது. இதில் பஸ்சில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவரும் ,ஆம்னி வாகனத்தில் வந்த பிரசாந்த், லிங்கா ,சுரேந்தர், சிவகுமார் மற்றும் அதன் ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அரசு பேருந்து – ஆம்னி வேன் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

அத்துடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிபட்டினம் போலீசார், அங்குள்ள சடலங்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.