இன்று முதல் இதுவும் ஓடாதா? இரவு நேர ஊரடங்கால் அதிரடி முடிவு..!

 

இன்று முதல் இதுவும் ஓடாதா? இரவு நேர ஊரடங்கால் அதிரடி முடிவு..!

இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இன்று முதல் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணிக்கு முதல் காலை 4மணிவரை அமலுக்கு வந்தது. ஊரடங்கானது வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இதுவும் ஓடாதா? இரவு நேர ஊரடங்கால் அதிரடி முடிவு..!

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளை பகல் நேரத்திலும் இயக்க போவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு 800 பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், இரவு நேர முழு ஊரடங்கால் ஆம்னி பேருந்து போக்குவரத்தை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இதுவும் ஓடாதா? இரவு நேர ஊரடங்கால் அதிரடி முடிவு..!

இதனிடையே ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்திருந்தால் அதற்கான பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் சிரமத்திற்கு பயணிகள் மன்னிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.