பைக் மீது ஆம்னிபேருந்து மோதிய விபத்தில், பெல் நிறுவன ஊழியர் பலி!

 

பைக் மீது ஆம்னிபேருந்து மோதிய விபத்தில், பெல் நிறுவன ஊழியர் பலி!

திருச்சி

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெல் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் சார்லஸ் (48). இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சார்லஸ் நேற்று தனது மகள் மரியஜூலியுடன் திருவானைக்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பைக் மீது ஆம்னிபேருந்து மோதிய விபத்தில், பெல் நிறுவன ஊழியர் பலி!

சஞ்சீவ் நகர் ஜங்சன் அருகே சாலையை கடக்க முயன்றபோது, சார்லஸ் வாகனத்தின் மீது எதிரே தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மரியஜுலியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைககாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.