நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்!

 

நாளை முதல் இயக்கப்படும்  அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது.
இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாளை முதல் இயக்கப்படும்  அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்!

அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்கும் என அறிவித்துள்ள தமிழக அரசு பொது பேருந்து போக்குவரத்தை நாளை முதல் செயல்படும் என்றும் அவை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இயக்கப்படும்  அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்!

இந்நிலையில் நாளை முதல் இயக்கப்படும் உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன் இயக்க உள்ளதால் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.