இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு!

 

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு!

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பத்தை சேர்ந்தவர் முருகம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் இரவு கோட்டக்கரை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டு ஜி.எஸ்.டி சாலை வழியே வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று முரும்மாள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு!

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே முருகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.