மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!

 

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே மனைவி இறந்த வேதனையில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தர நாடார் (90). இவரது மனைவி ராமலெட்சுமி அம்மாள் (85). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஒரு மகன் உயிரிழந்து விட்டார். ராமலட்சுமி அம்மாளுக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து வந்த அவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு உயிரிழந்தார்.

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!

இதனையடுத்து, உறவினர்கள் அவருக்கு கடந்த புதன் கிழமை இறுதிச்சடங்கை நடத்தினர். மனைவி ராமலெட்சுமி அம்மாள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சண்முகசுந்தரம் அவர் இறந்த வேததனையில் யாருடனும் பேசாமல், உணவு அருந்தாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், புதன் கிழமை இரவு அவர் படுக்கையிலேயே உயிரிழந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பிள்ளைகள் நேற்று அவருக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். மரணத்திலும் தம்பதி இணை பிரியாமல் இருந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.