ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் முதியவர் உயிரிழப்பு
Nov 17, 2020, 23:10 IST1605634821000
திருப்பத்தூர்
ஆம்பூரில் ஓடும் பேருந்தில் முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாப்பன்ணன். இவரது மனைவி முருகம்மாள். இந்நிலையில் ஆலங்காயம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பாப்பன்ணன், மனைவியுடன் தனியார் பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வழியிலேயே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து பயணிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.