“எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு ஓகே வா” : சிறுமிக்கு காதல் கடிதம் எழுதிய முதியவர் அதிரடி கைது!

 

“எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு ஓகே வா” : சிறுமிக்கு காதல் கடிதம் எழுதிய முதியவர் அதிரடி கைது!

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்த நேரத்திலும் பல குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை ,கொலை, கொள்ளை என சகலமும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இவை எதுவும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது பீர் பாஷா. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு 66 வயதான முகமது பீர் பாஷா காதல் கடிதம் எழுதி அதை அந்தச் சிறுமியிடம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, உனக்கு ஓகேவா” என்று எழுதி இருந்ததாக சொல்லப்படுகிறது.

கடிதத்தைப் படித்த சிறுமி அதை தனது பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுத்துள்ளார். இதைப் படித்த அவரின் பெற்றோர் நேராக முகமது பீர் பாஷா வீட்டுக்கு சென்று அவரை கண்டித்து விட்டு வந்துள்ளனர். ஆனாலும் அடங்காத அந்த முதியவர் தொடர்ந்து இந்த சிறுமிக்கு மிரட்டலுடன் தனது காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேற மறுத்து வீட்டுக்குள் முடங்கி கிடந்ததாக தெரிகிறது.

“எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு ஓகே வா” : சிறுமிக்கு காதல் கடிதம் எழுதிய முதியவர் அதிரடி கைது!

இதனால் வேதனை அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது பீர் பாஷா மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் முகமது பீர் பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது