“ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்வதே அதிகாரப்பூர்வ அறிவிப்பு” – அமைச்சர் பேட்டி!

 

“ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்வதே அதிகாரப்பூர்வ அறிவிப்பு” – அமைச்சர் பேட்டி!

அதிமுகவை பொறுத்தவரையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சொல்வது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என ஏற்கனவே அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. கடந்த இரண்டு பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்து அது போலவே, மூன்றாம் முறையும் அதிமுக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது கட்சிக் கூட்டணி குறித்த சலசலப்புகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

“ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்வதே அதிகாரப்பூர்வ அறிவிப்பு” – அமைச்சர் பேட்டி!

குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என பாஜக தரப்பு விடாப்பிடியாக இருக்கிறது. இதற்கு அதிமுக தலைமையில் இருந்து எவ்வித பதிலும் கொடுக்கப்படாத நிலையில், அதிமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் பழனிசாமியை ஏற்றுக் கொண்டால் தான் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிமுக தலைமை எடுப்பது தான் முடிவு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.