’ஓ.பி.சி இடதுக்கீடு: மத்திய அரசு 3 மாதங்களில் சட்டம் இயற்ற வேண்டும்’ நீதிமன்றம்

 

’ஓ.பி.சி இடதுக்கீடு: மத்திய அரசு 3 மாதங்களில் சட்டம் இயற்ற வேண்டும்’ நீதிமன்றம்

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகளையும் மாற்றங்களையும் செய்துவருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தது முதல் மருத்துவ மேற்படிப்புக்கு ஓபிசிக்கு இடஒதுக்கீடு கொடுக்க அவசியமில்லை என வாதிட்டது வரை பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்ற குரல் தமிழக கட்சிகளிடமிருந்து எழுந்தது.

’ஓ.பி.சி இடதுக்கீடு: மத்திய அரசு 3 மாதங்களில் சட்டம் இயற்ற வேண்டும்’ நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பாக திமுக, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று (ஜூலை 27) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ஒட்டுமொத்த தமிழகமும் இந்தத் தீர்ப்பினை அறிந்துகொள்ளும் ஆவலில் இருந்தது.

இந்திய மருத்துவ கவுன்சில். ‘இந்திய நாடு முழுக்க இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் வழங்குவது குறித்த முடிவை உச்சநீதிமன்றம்தான் வழங்க இயக்கும்’ என்று கூறியது. இதை மறுத்து நிராகரித்தது நீதிமன்றம். மேலும், இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த  மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

’ஓ.பி.சி இடதுக்கீடு: மத்திய அரசு 3 மாதங்களில் சட்டம் இயற்ற வேண்டும்’ நீதிமன்றம்

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்மூலம் இந்தப் பிரச்னை மத்திய அரசின் கைகளுக்குச் சென்றுவிட்டது. நீதிமன்றம் அறிவுறுத்திருப்பத்தை மூன்று மாதங்களில் செயல்படுத்துமா… அல்லது ஏதேனும்  காரணங்களைச் சொல்லி தள்ளி வைக்குமா என்ற கேள்வியும் எல்லோரிடமு எழுகிறது. அதற்கான பதிலை இனிவரும் காலம்தான் சொல்ல வேண்டும்.

ஆனால், காலம் தாழ்த்திக்கொண்டே செல்லும்பட்சத்தில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். அதனால் ஓபிசி பிரிவினரின் பிள்ளைகளுக்குத்தான் பெரும் இழப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கவலையோடு கூறுகிறார்கள்.