அண்ணாவின் 112 ஆவது பிறந்த தினம்! புகழாரம் சூட்டிய துணை முதல்வர் ஓபிஎஸ்

 

அண்ணாவின் 112 ஆவது பிறந்த தினம்! புகழாரம் சூட்டிய துணை முதல்வர் ஓபிஎஸ்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று தமிழ்நாடே கொண்டாடிய தலைவர். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், தெறிக்கும் பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் கொண்டாட்டம் நாளை கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அண்ணாவை நினைவு கூர்ந்துள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்துறை வித்தகர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த இத்திருநாளில், பேரறிஞர் அவர்களின் நினைவுகளையும், பெருமைகளையும் நினைந்து போற்றி, அவரது லட்சியமான சாதி பேதமற்ற சமநிலை சமுதாயத்தை உருவாக்கிட ஒற்றுமையோடு உழைப்போம் என உறுதி கொள்வோம். தமிழ்சமுதாயத்தை செம்மைப்படுத்த அயராது பாடுபட்ட இணையற்ற சமூக சீர்திருத்தச் செம்மல்; தமிழ்த்தாயின் தலைமகன்; சொல்வன்மையாலும் எழுத்துத் திறத்தாலும் இளைய தலைமுறையை தன்வசப்படுத்திய செயலாற்றலின் திருவடிவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.