சசிகலா வருகை- அமமுகவிற்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு

 

சசிகலா வருகை- அமமுகவிற்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சனை இருந்தால் பேசித் தீர்ப்போம் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சசிகலா வருகை- அமமுகவிற்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘அதிமுக இயக்கம் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் யாராலும் அதிமுக வை வெல்ல முடியாது திமுக ஒரு தீய சக்தி. அதை அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சி மீது மக்களிடம் கெட்ட பெயர் எதுவும் இல்லை. நல்ல பெயர் தான் நீடிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தொண்டர்கள் அதை நோக்கி செயல்பட வேண்டும். அரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்ப்போம். வெற்றி தான் இலக்கு. ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளை முதலில் கொண்டாடுவது அம்மா பேரவை தான். ஜெயலலிதா யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை உருவாக்கியுள்ளார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமைதான். அடுத்த 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டை ஆளும் உரிமையை அதிமுகவுக்கு மக்கள் வழங்கியுள்ளனர்.ஜெயலலிதா பிறந்த நாளில் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்” எனக் கூறினார்.