டாக்டரை அறைந்த நர்ஸ் -அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் -அடுத்து டாக்டர் செஞ்ச வேலை.

 

டாக்டரை அறைந்த நர்ஸ் -அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் -அடுத்து டாக்டர் செஞ்ச வேலை.

கொரானா வார்டிலிருந்த ஒரு டாக்டரும் ,நர்ஸும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட வீடியோ ஊடகத்தில் வைரலாகி வருகிறது

டாக்டரை அறைந்த நர்ஸ் -அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் -அடுத்து டாக்டர் செஞ்ச வேலை.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பல கொரானா நோயாளிகள் வருவதும் ,பலர் இறப்பதும் சகஜமான ஒன்றாக மாறி வந்தது .இந்நிலையில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்து கொள்ள போதுமான நர்ஸுகளும் டாக்டர்களும் அங்கு இல்லை .அதனால் அங்கிருக்கும் ஒரு சில நர்ஸுகள் இரவு பகல் என்று பாராமல் தூக்கமின்றி நோயாளிகளை கவனித்து வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒரு கொரானா நோயாளி இறந்து போனார் .அதனால் அவரின் இறப்பு சான்றிதழை கேட்டு அவரின் உறவினர்கள் அங்கு வந்திருந்தனர் .அப்போது அந்த நர்ஸிடம் அந்த உறவினர்கள் பலமுறை டெத் சர்டிபிகேட் கேட்டு தொல்லை படுத்தினர் .இதனால் கடுப்பான அந்த நர்ஸ் அந்த டாக்டரிடம் சென்று அந்த டெத் சர்டிபிகேட் கேட்டார் .ஆனால் அந்த டாக்டர் இதற்கு எழுத்து பூர்வமாக கேட்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார் ,உடனே அந்த நர்ஸ் அதை கேட்டு கோபமுற்று அந்த டாக்டரை பளாரென்று கன்னத்தில் அறைந்தார் .அதனால் அந்த டாக்டர் அதிர்ச்சியில் உறைந்தார்..பின்னர் சுதாரித்த அவர் அந்த நர்ஸின் முதுகில் அடித்தார் .இந்த காட்சியை அங்கிருந்த பலர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார்கள் .அதை பார்த்த காவல் துறை அதிகாரிகள் இது பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்கள் .இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட நீதவான் ரவீந்திர குமார் உத்தரவிட்டார்.அதன்  பிறகு அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததால் இப்படி நடந்து கொண்டார்கள் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினர் .