சேலம் கோவிலில், அமைச்சரவை பட்டியலை வைத்து வழிபட்ட என். ரங்கசாமி!

 

சேலம் கோவிலில், அமைச்சரவை பட்டியலை வைத்து வழிபட்ட என். ரங்கசாமி!

சேலம்

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்க உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சேலம் கோவிலில் அமைச்சரவை பட்டியலை வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பெறும்பான்மை இடங்களில் வென்றதை அடுத்து, அந்த மாநில முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி நாளை மறுதினம் பதவி ஏற்க உள்ளார்.

சேலம் கோவிலில், அமைச்சரவை பட்டியலை வைத்து வழிபட்ட என். ரங்கசாமி!

இதனையொட்டி, அவர் சேலத்தில் உள்ள தனது குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், புதிய அமைச்சரவை பட்டியலையும் சுவாமியிடம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்.

தொடர்ந்து, கோவில் வளாகத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ரங்கசாமி, பின்னர் புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கோவிலுக்கு வந்த ரங்கசாமிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.