“எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை”
Jul 22, 2021, 16:24 IST1626951252000
அதிமுகவை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சோதனையில் அமைச்சராக இருந்த போது அவர் வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக தெரியவந்ததையடுத்து போலீசார் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதற்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்தது. அதிமுக பிரமுகர்கள் மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்ட நினைக்கும் ஸ்டாலின் அரசின் பழிவாங்கும் செயல் இது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான ஒரு இடத்தில் இருந்த மட்டும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.