“சோறு போடாத தாயை கூறு போட்ட மகன்”-கொலை வெறியாக மாறிய பசி வெறி

 

“சோறு போடாத தாயை கூறு போட்ட மகன்”-கொலை வெறியாக மாறிய பசி வெறி

ஒரு குடும்பத்தில் சமைக்காமல் சோறு போடாமலிருந்த தாயையும் ,சகோதரியையும் ஒரு வாலிபர் கொலை செய்தார் .

“சோறு போடாத தாயை கூறு போட்ட மகன்”-கொலை வெறியாக மாறிய பசி வெறி


குஜராத்தின் ராஜ்கோட்டில் மோபி தாலுகாவின் ஜிகியாரி கிராமத்தில் தேவ்ஷி பாட்டியா என்ற 40 வயதான நபர் தனது சகோதரி சங்கிதா பாட்டியா மற்றும் தாய் கஸ்தூர் பாட்டியா ஆகியோருடன் வசிக்கிறார்.கடந்த வாரம் சனிக்கிழமை இரவு தேவ்ஷி வெளியே போய் விட்டு வந்தார் .அப்போது இருவரும் சமைக்காமல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் .மேலும் பகல் நேரத்தில் அந்த பெண்களிடையே வாக்குவாதம் அதிகரித்தது.
மதியம் முதல், சங்கிதாவும் கஸ்தூரும் அந்த குடும்பத்திற்கு யார் இரவு உணவை சமைப்பது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேவ்சி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவர் திரும்பி வந்தவுடன் இரவு உணவை யார் சமைப்பது என இரு பெண்களும் தங்களுக்குள் முடிவு செய்யும்படி தேவ்ஷி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு இரு பெண்களுக்கு இடையேயான சண்டை அதிகமானது .
அதை பார்த்து மிகுந்த பசியிலிருந்த தேவசி யாராவது தனக்கு சமைத்து சாப்பாடு போடும்படி கேட்டார் .ஆனால் இருவரும் அதை காதல் வாங்கிக்கொள்ளாமல் இருந்தார்கள் .அதனால் மிகுந்த கோபமுற்ற அவர் அருகேயிருந்த ஒரு கோடரியால் இருவரையும் வெட்டி சாய்த்தார் .அந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் .
பின்னர் போலீசுக்கு அவர்களிருவரையும் கொன்று விட்டதாக அவரே தகவல் தெரிவித்தார் . போலீசார் விரைந்து வந்து தேவஷியை கைது செய்தார்கள்

“சோறு போடாத தாயை கூறு போட்ட மகன்”-கொலை வெறியாக மாறிய பசி வெறி