அக்.28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

 

அக்.28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

புதுச்சேரி , தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்கரைப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாகவும் இருக்கும், வடதமிழகம் ,தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அக்.28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

அத்ததுடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கவுள்ளதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அக்.28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது