மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழப்பு

 

மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழப்பு

விழுப்புரம்

திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி இறைச்சி கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா. இவரது மகன் அப்பாஸ் (30). இவர் கிடங்கல் -1 பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் காலை 6 மணிக்கே சென்று கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் காலை சென்ற அப்பாஸ், கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் அப்பாஸ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயமடைந்தார்.

மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழப்பு

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அப்பாஸை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்