ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் : இன்றே கடைசி நாள்!

 

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் : இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் : இன்றே கடைசி நாள்!

5 நாட்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,298, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 என மொத்தம் 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 என மொத்தம் 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் : இன்றே கடைசி நாள்!

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேட்புமனுக்களை திரும்பப் பெற 25ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கு 50 சதவீதத் தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது