‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

 

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு  ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு  ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு  ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த மனு மீதான தீர்ப்பில்,அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு  ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

ஆனால் இந்த ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு மற்றும் அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் , மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50 % இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இடைக்கால நிவாரணமும் மறுக்கப்பட்டுள்ளது.