“ஈரோட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை” – ஆட்சியர் கதிரவன் தகவல்

 

“ஈரோட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை” – ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். அப்போது, பயனாளிகள் மத்தியில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், பவானி சட்டமன்ற தொகுதியில் 10 ஆயிரத்து 796 குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோடி ரூபாய் வரை பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பதாகவும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட தேதியில் நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

“ஈரோட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை” – ஆட்சியர் கதிரவன் தகவல்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஈரோட்டில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும் கூறினார். அத்துடன், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஈரோடுக்கு வந்துள்ள தம்பதி உள்பட 3 பேர் மட்டும், பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் கதிரவன் தெரிவித்ததார்.