“திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” – மு.க அழகிரி பேட்டி!

 

“திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” – மு.க அழகிரி பேட்டி!

திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால், திமுவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்த மு.க அழகிரி உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரிடம் ஆசிபெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் ஜனவரி 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்த உள்ளேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுப்பேன். அவர்கள் கூறினால் கட்சி தொடங்குவேன்” என்று கூறினார்.

“திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” – மு.க அழகிரி பேட்டி!

மேலும், ” திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் எனக்கு இதுவரை வரவில்லை. அக்கட்சியில் இணைந்து பணியாற்றவும் வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை வந்தவுடன் கண்டிப்பாக அவரை நேரில் சென்று சந்திப்பேன்” என்றும் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தலில் பங்கு வகிப்பேன் என மு.க அழகிரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால், அவர் திமுகவில் மீண்டும் திமுகவில் இணையப் போகிறாரா? அல்லது ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியில் சேருகிறாரா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.