“NO CAA, NO NRC ” வாசகங்கள் எழுதிய கருப்பு டிஷர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி!

 

“NO CAA, NO NRC ” வாசகங்கள் எழுதிய கருப்பு டிஷர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி!

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்ட சபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.  6 மாத காலத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். அதனால், கடந்த டிசம்பர் மாதத்தோடு அந்த 6  மாத காலம் நிறைவடைந்தது. 

ttn

ஜனவரி மாதம் சட்டசபை கூட்டப்படும் என்று உறுதியாகி இருந்தாலும், இடையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடைபெறுவதால் எந்த எப்போது சட்டசபை கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர், ஜனவரி 6 ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ttn

அதில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “NO CAA, NO NRC ” என்னும் வாசகங்கள் எழுதப்பட்ட கருப்பு டிஷர்ட் அணிந்து கொண்டு சட்டப்பேரவையில் கலந்து கொண்டார். அவரின் இந்த நூதன செயல், சட்டசபையில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.