“NO CAA” கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த தொல்.திருமாவளவன் !

 

“NO CAA” கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த தொல்.திருமாவளவன் !

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். சென்னை, பெசண்ட் நகரில் பெண்கள் “வேண்டாம் சி.ஏ.ஏ., – என்.ஆர்.சி” என்ற வாசகங்களை வீட்டு வாசலில் கோலமிட்டனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், எத்தகைய போராட்டம் நடந்தாலும், அந்த சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் தினமும் காலை கோலமிடுவது வழக்கம். 

ttn

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். சென்னை, பெசண்ட் நகரில் பெண்கள் “வேண்டாம் சி.ஏ.ஏ., – என்.ஆர்.சி” என்ற வாசகங்களை வீட்டு வாசலில் கோலமிட்டனர். இதனால், காவல்துறையினர் அந்த பெண்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து அவர்களது வீட்டு வாயிலிலும் அதே போலக் கோலமிட்டனர். 

ttn

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேளச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தின் வாசலில் ” NO CAA” என்று கோலமிட்டார். அவருடன் அவரது கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.