தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

 

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில்காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை என்றும் கேரளா , அசாம், மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் இல்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் ஆணையம் இவ்வாறு அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.