“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான்” : பாஜக துணைத்தலைவர் பேச்சு!!

 

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான்” : பாஜக துணைத்தலைவர் பேச்சு!!

என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான்” : பாஜக துணைத்தலைவர் பேச்சு!!

சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும் அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டு இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் நெல்லையில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் என கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி முடிவு விரைவில் தெரியவரும் நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான்” : பாஜக துணைத்தலைவர் பேச்சு!!

இந்நிலையில் நெல்லையில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் , என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்தது ” என்றார். திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். இதனால் அதை சொல்லியே அவர் தேர்தலில் வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது