இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க… உசுரு முக்கியம்- நித்தியானந்தா எச்சரிக்கை

 

இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க… உசுரு முக்கியம்- நித்தியானந்தா எச்சரிக்கை

இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க… உசுரு முக்கியம்- நித்தியானந்தா எச்சரிக்கை

பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதில் தான் வசித்துவருவதாக கூறி வரும் நித்தியானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகிறார். இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை.

இந்த நிலையில், நித்யானந்தா தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கும் யாரும் செல்லாதீர்கள், இந்த 4 நாடுகளை சேர்ந்தவர் வேறு இடங்களில் இருந்தால் அங்கேயே சில காலம் இருங்கள். பிரளயம் முடிந்து, வாழ்க்கை புதுமையாய் மலரும். உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்ச நன்மையும், சுகமும்… வரமும்… ஆகவே மேற்கண்ட இந்த 4 நாடுகளுக்கு செல்லாதீர்கள். வாழ்க்கை என்பதே வரவு! மரணம் என்பது செலவு… இந்த ஆண்டின் நல்ல வரவேற்பு நம்மை காத்துக்கொள்வதுதான்… என்னோடு மங்களமாய் இணைந்திருங்கள் நல்லதெல்லாம் செய்கின்றேன்” எனக் கூறினார்.