மணப்பாறையிலிருந்து கைலாசாவுக்கு பேருந்து! வைரலாகும் மீம்!!

 

மணப்பாறையிலிருந்து கைலாசாவுக்கு பேருந்து! வைரலாகும் மீம்!!

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மணப்பாறையிலிருந்து கைலாசாவுக்கு பேருந்து! வைரலாகும் மீம்!!

இந்தநிலையில் மணப்பாறையில் இருந்து கைலாசாவுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக மீம்ஸ் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மணப்பாறை முதல் கைலாசா என்றும், வழி வையம்பட்டி என்றும் அரசு போக்குவரத்து கழகம்-கைலாசா என்ற வாசங்கள் அடங்கிய பஸ்சில் ஒரு பக்கம் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலவும், இன்னொரு பக்கம் வடிவேலு நடனம் ஆடுவது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.