கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா

 

கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா

இந்நிலையில் தற்போது கைலாசாவுக்கு வர விரும்புவோர் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்துவரப்படுவார் எனவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்