தங்க கடத்தல் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு!

 

தங்க கடத்தல் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

தங்க கடத்தல் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு!

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதை தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி வந்த கேரள காவல்துறையினர், பெங்களூருவில் வைத்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கைதாகிய ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஸ்வப்னா சுரேஷ்க்கு மற்றும் சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை என்ஐஏ அதிகாரிகள் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களின் என்ஐஏ காவல் இன்றோடு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா, சந்தீப் நாயரின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.