திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை… மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்…

 

திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை… மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்…

விழுப்புரம்

விழுப்புரத்தில் திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் உள்ள வழுதரெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலி தொழிலாளி. இவருக்கும், கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கிருத்திகா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கிருத்திகாவுக்கும், அவரது மாமியார் ராசாத்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை… மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்…

இதுகுறித்து கணவர் அண்ணாதுரையிடம் தெரிவித்தும், அவர் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருத்திகாவின் தந்தை அண்ணாமலை, மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 5 மாதங்களில் மணப்பெண் உயிரிழந்ததால், இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.